Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியீடு?

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (16:29 IST)
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக பள்ளி கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.


 


பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெற்றது.  இதையடுத்து ஆசிரியர்கள் குறைவாக இருந்ததால் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி வெளியான தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலால் சற்று தாமதம் அடைந்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறுகையில், மே மாதம் முதல் வாரத்தில் தேர்வு முடிகள் வெளியிட தேர்வு துறை முடிவு செய்துள்ளதாகவும், தேர்வு முடிவு வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments