Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1200 கோடி மதிப்பு போதைப்பொருள்: பிடிபட்ட 2 ஆப்கானிஸ்தான் நபர்கள்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (18:12 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் டெல்லியில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியில் 1200 கோடி மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருள் பிடிபட்டுள்ளது. இதனையடுத்து இந்த போதைப் பொருளை ஆப்கானிஸ்தானிஅ சேர்ந்த இருவரிடம் கைப்பற்றியதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
தற்போது ஆப்கன் நாட்டை சேர்ந்த இருவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணையில் லக்னோவில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 312 கிலோ போதைப்பொருள் சிக்கி உள்ளதாகவும் அதன் மதிப்பு 1,200 கோடி என்றும் கூறப்படுகிறது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் 1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments