Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.1200 கோடி மதிப்பு போதைப்பொருள்: பிடிபட்ட 2 ஆப்கானிஸ்தான் நபர்கள்!

drugs
, செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (18:12 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் டெல்லியில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியில் 1200 கோடி மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருள் பிடிபட்டுள்ளது. இதனையடுத்து இந்த போதைப் பொருளை ஆப்கானிஸ்தானிஅ சேர்ந்த இருவரிடம் கைப்பற்றியதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
தற்போது ஆப்கன் நாட்டை சேர்ந்த இருவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணையில் லக்னோவில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 312 கிலோ போதைப்பொருள் சிக்கி உள்ளதாகவும் அதன் மதிப்பு 1,200 கோடி என்றும் கூறப்படுகிறது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் 1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை!