Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயது சிறுமியின் மண்டை ஓட்டை துளைத்த ஆணி! மருத்துவர்கள் சாதனை

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (07:10 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுமியின் மண்டை ஓட்டை துளைத்த ஆணி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்

மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் என்ற மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வழியாக நடந்து சென்ற 12 வயது சாந்தினி என்ற சிறுமி மீது எதிர்ப்ராமல் கான்க்ரீட் துண்டு ஒன்று விழுந்தது. அந்த துண்டில் இருந்த ஆணி, சிறுமியின் மண்டை ஓட்டை சுமார் 9மிமீ வரை துளைத்திருந்தது

இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் மண்டை ஓட்டை துளைத்திருந்த ஆணியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்த மருத்துவர் குழு வெற்றிகரமாக ஆணியை அப்புறப்படுத்தினர். தற்போது சிறுமி சாந்தினி நலமுடன் இருப்பதாகவும் இருப்பினும் இன்னும் ஒரு மாதம் கழித்து சாந்தினிக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments