Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (17:59 IST)
சென்னையில் நடந்து வரும்  இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா, இந்தியாவுடன் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

இன்று, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான 3 -வது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இரு போட்டிகளில் இரு அணிகளும்1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ள நிலையில்,இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,  இன்றைய 3 வது ஒரு நாள் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டிய நிலையில்,  இன்று காலை முதல் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.  அப்போது, பிளாக்கில் சிலர் டிக்கெட் விற்பதாக போலீஸாருக்கு தகவல் வெளியானது.

இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸார் சோதனை நடத்தினர். அதில்,பிளாக்கில் டிக்கெட் விற்றதாக 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 30 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments