Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தஞ்சை தேர்த்திருவிழாவில் பயங்கர விபத்து: 12 பேர் பரிதாப பலி!

car festival
, புதன், 27 ஏப்ரல் 2022 (07:22 IST)
தஞ்சாவூரில் தேர் திருவிழாவின் போது நிகழ்ந்த பயங்கர விபத்தில் 12 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தஞ்சை அருகே களிமேடு என்ற பகுதியில் அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது
 
இந்த தேர் வீதிகளில் உலா வந்தபோது திடீரென உயர் அழுத்த மின்சார கம்பி தேரில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் இரண்டு சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை நடைபெறும் இந்த திருவிழாவில் உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலியானதால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

51.08 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!