Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வேறு இடத்திற்கு மாற்றம்?

ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வேறு இடத்திற்கு மாற்றம்?
, வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (22:38 IST)
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆட்சியை நடத்தப்போவது ஓ. பன்னீர்செல்வமா? அல்லது சசிகலாவா? என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.


 

இந்நிலையில், ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு, பேருந்தில் ஏற்றப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு பிரிவினர் கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கம் அருகேயுள்ள கூவத்தூரின் கோல்டன் பே ரெஸார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மற்றவர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களுடன், அவர்களது உறவினர்களிடம் கூட தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்த இடம் பலருக்கும் தெரிந்துவிட்டதால் வேறு ரகசிய இடத்தில் தங்க வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து, பழையபடி சொகுசு பேருந்தில் அழைத்துச்சென்றாலும் தெரிந்துவிடும் என்பதால், தனித்தனி காரில் எம்.எல்.ஏக்களை அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கை