Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை!!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (10:00 IST)
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
சென்னையில் கடந்த வாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மழை பெய்தால் சென்னை குளிர்ச்சியானது என்பதும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் மீண்டும் மழை பெய்ததை அடுத்து சென்னை மக்கள் குளிர்ச்சியை அனுபவித்தனர். சென்னையின் பல இடங்களில் நேற்று மழை பெய்தது. 
 
மேலும் இன்று கரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments