Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை!!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:06 IST)
அடுத்த இரண்டு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
 
மழை காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments