Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10ஆம் வகுப்பு தேர்வு: சிவகெங்கை மாவட்டம் முதலிடம்

Advertiesment
10ஆம் வகுப்பு தேர்வு: சிவகெங்கை மாவட்டம் முதலிடம்
, புதன், 23 மே 2018 (09:24 IST)
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகெங்கை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் 98.5% தேர்ச்சு பெற்றுள்ளனர். 98.38% தேர்ச்சி பெற்று ஈரோடு 2ஆம் இடத்தையும், 98.26% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் குமரி, நெல்லை, தூத்துகுடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் 97%க்கும் மேல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
webdunia
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் வரும் ஜூன் 28ஆம் தேதி மறு தேர்வு எழுதலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் இந்த தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விபரம்
 
மொழிப்பாடம்: 96.42%
ஆங்கிலம்: 96.50%
கணிதம்: 96.18%
அறிவியல்: 98.47
சமூக அறிவியல்: 96.75

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %