சென்னையில் 102 டிகிரி வெயில்.. 14 இடங்களில் சதம்..! – வெப்ப அலையில் அவதியுறும் மக்கள்!

Prasanth Karthick
வியாழன், 4 ஏப்ரல் 2024 (11:24 IST)
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.



மார்ச் இறுதி முதலாக கோடை வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பம் வாட்டி வருகிறது. ஏப்ரல் தொடக்கமே இப்படி என்றால் மே மாதம் எல்லாம் என்ன ஆகும் என மக்கள் அயற்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் 14 பகுதிகளில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயிலும், சென்னையில் 102 டிகிரி வெயிலும் வாட்டி வருகிறது.

ALSO READ: ”என்னை லவ் பண்ணலைனா..” லாரி டிரைவரின் லவ் டார்ச்சர்! பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல கீழடுக்கு காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 7ம் தேதி வரை பெருவாரியான பகுதிகளில் வறண்ட வானிலையும், ஏப்ரல் 8,9ல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments