Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பன் பாலத்தில் 100வது விபத்து: கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (23:59 IST)
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான ராமேஸ்வரத்தையும் இராமநாதபுரத்தையும் இணைக்கும் சாலை வாகனம் செல்லும் பாலத்தின் பெயர் பாம்பன் பாலம். இந்த பாலத்தின் சாலை வழுவழுப்பாக இருப்பதால் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது



 
 
இந்த சாலையில் விபத்துக்கள் நடைபெறாவண்ணம் சாலையை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கேட்டுக்கொண்டபோதும் இராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை
 
இந்த நிலையில் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்து ஒன்று இந்த பாலத்தின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 100வது விபத்து என்று குறிப்பிட்டு கேக் வெட்டி இந்த விபத்தை அப்பகுதிமக்கள் கொண்டாடினர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments