Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெயில் நிலையத்தில் சில்லரைக்கு 100 ரூபாய் கமிஷன்

ரெயில் நிலையத்தில் சில்லரைக்கு 100 ரூபாய் கமிஷன்
, வியாழன், 10 நவம்பர் 2016 (11:41 IST)
சென்னை எழும்பூர் நிலையத்தில் சில்லரை தட்டுபாட்டை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100 ரூபாய் கமிஷன் வாங்கியுள்ளனர். இது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி நேற்று முந்தினம் இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நவம்பர் 11ஆம் தேதி வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
 
ஆனால் ரயில் நிலையங்களிலும் சில்லரை தட்டுபாடு ஏற்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். இதை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் சில்லரை கொடுக்க 100 ரூபாய் கமிஷன் பெற்றுள்ளனர்.
 
இதனால் பயணிகள் வேறு வழியின்றி இந்த முறையில் சில்லரை மாற்றியுள்ளனர். இது பயணிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மறைமுகமாக கவர்னர் ஆட்சி நடக்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு!