Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10% இட ஒதுக்கீடு: அனைத்து கட்சி கூட்டத்தில் 21 கட்சிகளின் நிலை என்ன?

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (21:09 IST)
பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 21 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 21 கட்சிகளில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு விஷயத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும். 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. திமுக, மதிமுக, மநீம, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்பட மொத்தம் 16 கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தன.
 
அதேபோல் அதிமுக, பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம் உள்பட 6 கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்தன. 10 % இட ஒதுக்கீடு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இடையே வாக்குவாதம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 10% இடஒதுக்கீடு அளிப்பதற்கு நாம் தமிழர் எதிர்ப்பும் , புதிய தமிழகம் ஆதரவும் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு வேறு வகையில் உதவி செய்யலாம் என்றும் 10% இடஒதுக்கீடு கூடாது என்றும் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்தார். பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10 % இடஒதுக்கீடு என்பது  சமூக நீதிக்கு எதிரானது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
 
69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்தார். தமிழகத்தில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பில்லாமல், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம் என மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments