Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலா 10 லட்சம் நிவாரண நிதி; முதல்வரின் அதிரடி உத்தரவு

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (11:42 IST)
கஜா புயலில் உயிரிழந்தவர்வர்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை கடந்த கஜா புயலால் திருவாரூர், தஞ்சை, நாகை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசின் சிறப்பான முன்னேற்பாடுகளால் புயலின் மையப்பகுதி கரையை கடந்ததும் மீட்புப்பணிகள் தொடங்கிவிட்டன
 
சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. கஜா புயல் தாக்கத்தால் தஞ்சையில் 5 ஆயிரம் மின்கம்பங்களும், நாகையில் 4 ஆயிரம் மின்கம்பங்களும், திருவாரூரில் 3 ஆயிரம் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது.
 
பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கஜா புயல் தாக்குதலால் தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments