Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு ‘மக்கள் பள்ளி திட்டம்’: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (07:35 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் கடந்த 6 மாதத்தில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதும் அந்த அறிவிப்புகள் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மக்கள் பள்ளி திட்டம் என்ற புதிய  திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கற்றல் குறைபாட்டை சரிசெய்யும் விதமாக வீடுகளுக்கு சென்று பாடம் கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
 
இந்தத் திட்டத்திற்கு மக்கள் பள்ளி கல்வித் திட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments