Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி: அதிரடி அறிவிப்பு

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி: அதிரடி அறிவிப்பு
, செவ்வாய், 4 மே 2021 (10:41 IST)
தமிழகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத் துறை அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானதை அடுத்து சமீபத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்து 1,212 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் நியமனம் செய்யப்பட்டதாகவும் நிரந்தர பணி கிடைக்காது என்றும் கூறப்பட்டு வந்தது 
 
ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் சுகாதாரத்துறை இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. 1,212 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டாலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அவர்கள் அனைவருக்கும் நிரந்தர பணி வழங்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட செவிலியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே மாதத்தில் 75 லட்சம் வேலையிழப்புகள்! – அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!