Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று மட்டும் எத்தனை பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டது தெரியுமா?

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (09:49 IST)
இ பாஸ் எளிமையாக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று லட்ச கணக்கில் இ பாஸ் வழங்கப்பட்டது என தமிழக அரசு தகவல். 
 
தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்காததாலும், இ-பாஸ் பெற்று தர இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் அதிகரித்துள்ளதாலும் இ-பாஸ் நடைமுறைகளை நீக்கவோ அல்லது எளிமைப்படுத்தவோ வேண்டும் என மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
 
எனவே, இ-பாஸ் நடைமுறைகளில் புதிய தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி நேற்று முதல் (ஆகஸ்டு 17) இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 
 
அதாவது நேற்றைக்கு மட்டும் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இ பாஸ் இல்லாமல் வந்தவர்களை போலீஸார் மடக்கி பிடித்து திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நேற்று நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்வெளி நாயகா..! பூமி திரும்பிய சுபன்ஷூ சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து! கேக் வெட்டி கொண்டாட்டம்!

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments