பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு: ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (07:13 IST)
5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களாக உயராமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றதை அடுத்து கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது
 
கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்றைய விலை உயர்வு சற்று அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து லிட்டர் 93,62 ரூபாய்க்கும், டீசல் விலை 29 காசுகள் உயர்ந்து லிட்டர் 87.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தப்படுவதாக கூறப்பட்டாலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபோது அதிகப்படுத்திய பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த வேண்டுகோளை மத்திய மாநில அரசுகள் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments