Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பரங்குன்றத்தில் 202 ஆவது முறையாக போட்டி – சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் !

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (13:41 IST)
அதிக முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் என்ற பெருமையைக் கொண்ட சுயேட்சை வேட்பாளரான பத்மராஜன் 202 ஆவது முறையாக திருப்பரங்குன்றத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன். இவர் இதுவரை 201 முறை சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் எனப் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த இவர் 1988 முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விதமானத் தேர்தல்களிலும் பங்கேற்று வருகிறார். ஆனால் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றதில்லை. மேலும் பல தேர்தல்களில் டெபாசிட் தொகையைக் கூட திரும்ப பெற்றதில்லை. இதுவரை இவர் தேர்தலுக்காக கட்டிய டெபாசிட் தொகையே 30 லட்சத்துக்கு மேல் இருக்கும் எனக் கூறுகிறார்.

ஜெயலலிதா, கருணாநிதி , மோடி, தேவகவுடா, அப்துல் கலாம், பிரனாப் முகர்ஜி ஆகிய முக்கியத் தலைவர்களையும் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments