சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

Mahendran
சனி, 28 செப்டம்பர் 2024 (15:35 IST)
சென்னையில் தனியார் சுடுகாடு மற்றும் இடுகாடு அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
சென்னையில்  மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனியார் சுடுகாடுகள் அமைக்க அனுமதி வழங்க இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
தற்போது சென்னையில் 230 இடுகாடுகள் மற்றும் 42 சுடுகாடுகள் இருக்கும் நிலையில், தனியார் சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 
 
மக்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் நீர்நிலைகளில் இருந்து 30 மீட்டர் தொலைவில் சுடுகாடு அமைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நில உரிமையாளர்கள் ரூபாய் 25 ஆயிரம் செலுத்தி உரிமை பெற வேண்டும் என்றும், ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தனியார் சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் குடிநீர் வசதி, வாகனம் நிறுத்தும் இடம், சிசிடிவி கண்காணிப்பு, ஓய்விடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்றும், நாய் உள்ளிட்ட விலங்குகள் நுழையாமல் தடுக்க, சுற்றுச்வர் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட சில வழிகாட்டி நெறிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
சென்னை மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், விரைவில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கோரப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments