Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் இதை செய்திருக்க மாட்டார்... சுமந்த் சி.ராமன் ட்விட்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:42 IST)
சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கிறார் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன். 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் விவசாய போராட்டம் குறித்த செய்தி ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து அது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்  அமெரிக்க பாப் பாடகி ரிஹானா. இவரின் கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளனர். 
 
சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் தேசிய இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் வசிப்போர் பார்வையாளர்களாக மட்டும் இருங்கள், பங்கேற்பாளர்களாக மாற வேண்டாம். இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியும் என பதிவிட்டுள்ளார். 
 
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன், போராட்டத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்வது எப்படி நாட்டின் இறையாண்மையைக் கெடுக்கும்? சச்சின் டெண்டுல்கர் தன்னைத் தவிர யாருக்காகவும் நிற்காதவர். யாரேனும் ட்வீட் செய்யச்சொல்லி செய்திருப்பார். ஹீரோக்களாக நினைப்படுபவர்கள் பெரும்பாலும் அப்படியில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments