Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

சச்சின் இதை செய்திருக்க மாட்டார்... சுமந்த் சி.ராமன் ட்விட்!

Advertiesment
Suman C Raman comments in Sachin tweet about farmers
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:42 IST)
சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கிறார் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன். 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் விவசாய போராட்டம் குறித்த செய்தி ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து அது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்  அமெரிக்க பாப் பாடகி ரிஹானா. இவரின் கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளனர். 
 
சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் தேசிய இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் வசிப்போர் பார்வையாளர்களாக மட்டும் இருங்கள், பங்கேற்பாளர்களாக மாற வேண்டாம். இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியும் என பதிவிட்டுள்ளார். 
 
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன், போராட்டத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்வது எப்படி நாட்டின் இறையாண்மையைக் கெடுக்கும்? சச்சின் டெண்டுல்கர் தன்னைத் தவிர யாருக்காகவும் நிற்காதவர். யாரேனும் ட்வீட் செய்யச்சொல்லி செய்திருப்பார். ஹீரோக்களாக நினைப்படுபவர்கள் பெரும்பாலும் அப்படியில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் பெயர்! யார் அந்த பாஷ்யம்? – வைகோ கேள்வி!