கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (20:23 IST)
கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 63. 
 
மனோகர் பாரிக்கர் கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில மணி நேரங்களாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
 
இந்தியாவின் முதல் ஐஐடி பட்டாதாரியான கோவா முதல்வர் மறைந்த மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments