கோடநாடு வீடியோ விவகாரம்: களத்தில் இறங்கிய டிராஃபிக் ராமசாமி; உச்சநீதிமன்றத்தில் மனு

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (11:08 IST)
கோடநாடு வீடியோ விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்றும், இந்த வீடியோ வெளியிட்டவர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்
இந்த வீடியோவில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் தமிழகத்தில் இருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுனரை இன்று மாலை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கோடநாடு வீடியோ சம்மந்தமாக சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லாததால் தான் சிபிஐ விசாரிக்க வேண்டுமென மனு அளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments