Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு ; கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (16:46 IST)
திருப்பூர் அருகே, தனியார் கல்லூரி வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காயமடைந்தனர்.

 
திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே செயல்பட்டு வருகிறது, கருப்பணன் மாரியப்பன் கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் தினந்தோறும் மாணவர்கள் திருச்சியிலிருந்து கல்லூரி வரை பயணிக்கின்றனர்.
 
இன்றும் வழக்கம் போல கல்லூரி மாணவர்களை குன்னத்தூர் என்ற பகுதியில் ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டு இருக்கும் போது, கூலிபாளையம் என்ற பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 20க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காயமடைந்தனர்.
 
இந்த விபத்து குறித்து விசாரித்த போலீஸார், பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு எற்பட்டதால் தான் விபத்து நேர்ந்தது என கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments