ஆயுத பூஜை விடுமுறை.. சென்னையில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள்.. முழு விவரங்கள்..!

Siva
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (11:44 IST)
ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக 2000 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மூன்று நாட்களுக்கும் விடுமுறை கிடைக்கிறது. தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து 2092 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் பத்தாம் தேதி மட்டும் 2000 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. எனவே நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடியவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments