அண்ணாமலை விளம்பர அரசியல் செய்து வருகிறார்- கடம்பூர் ராஜூ

Sinoj
சனி, 10 பிப்ரவரி 2024 (16:55 IST)
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால், ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக  பாஜக மீது குற்றம்சாட்டி வருகிறது.

இதற்குப் பதிலடியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் பாஜக மீதும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணவில்லை. தேசிய கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக உள்ளன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளம்பர அரசியல் செய்து வருகிறார். அது தமிழ் நாட்டில் எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வீட்டுக் கடன் வட்டி குறையும்.. மகிழ்ச்சியான செய்தி..!

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments