வெற்றி துரைசாமியை தேடும் பணி 7 வது நாளாக நீட்டிப்பு.! நாளை டிஎன்ஏ பரிசோதனை முடிவு.!!

Senthil Velan
சனி, 10 பிப்ரவரி 2024 (16:46 IST)
இமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியில் காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக தொடர்கிறது.
 
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார்.  அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 
 
இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி மாயமான நிலையில் அவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு 7வது நாளாக ஈடுபட்டுள்ளது. மேலும் வெற்றி துரைசாமியை  கண்டுபிடிக்க  இந்திய கடற்படை களமிறங்கியுள்ளது.

ALSO READ: அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. பா.ம.க..? எத்தனை தொகுதிகள்..!!
 
இந்நிலையில் கார் விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியவரும். சட்லஜ் நதி அருகே கண்டறியப்பட்ட மூளை திசுக்களில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments