சீனாவின் ஜியாங்க்சி நகரத்தில் ஏராளமான மக்கள், திடீரென ஆகாயத்தில் மிதக்கும் ஒரு நகரத்தை பார்த்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்.13 ஆம் தேதி வானத்தில் மிதக்கும் நகரத்தைப் போன்ற உருவம் ஒன்று மேகத்தில் உலாவியது. இதைக் கண்ட சீன மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அதை ஒருவர் தனது செல்போனில் அதை விடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், அது கானல் நீராக இருக்காலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.