Publish Date: Wed, 16 Dec 2015 (18:00 IST)
Updated Date: Wed, 16 Dec 2015 (18:04 IST)
ஒரு மனிதர் ஒரு குகையில் 25 வருடங்கள் வாழ்ந்து, அந்த குகையையே ஒரு சித்திரமாக மாற்றியுள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம். அது உண்மையே.
நியூ மெக்சிகோவின் வடக்கில் உள்ள ஒரு பாலைவனத்தில் உள்ள ஒரு குகையை தேர்ந்தெடுத்த ரா பவுட்டி என்பவர், 25 வருடங்கள் அந்த குகையிலேயே வாழ்ந்து, அந்த குகையையே ஒரு சிற்பமாக மாற்றியுள்ளார். அவருடன் துணையாய் இருந்தது அவரின் நாய் மட்டுமே.
அந்த குகையில் அவர் அற்புத கலை நுணுக்கங்களை படைத்து உள்ளார். சாப்பிடுவது, தூங்கும் நேரம் போக மற்ற நேரமெல்லம் அவர் அந்த படைப்புகளை உருவாக்குவதிலேயே ஆர்வமாக இருந்துள்ளார். அவர் ஒரு பொறியளர் கிடையாது. சாதரண மனிதரே. அந்த குகையை செதுக்கி வளைவுகளை ஏற்படுத்தி ஒரு அழகான படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவர் தற்போது குகை மனிதன் என்று அழைக்கப்படுகிறார்.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத அந்த கலைப் படைப்பை நீங்கள் பாருங்கள்...