Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'வாழ்வாய் நீ நல்ல காதல் நாட்டில் உள்ளவரை!' - கவிதாஞ்சலி!

Advertiesment
தர்மபுரி இளவரசன்
எழுகின்ற நெருப்பின் புகை செல்லும்
வானோக்கி
சுழிக்கின்ற வெள்ளம் புகும்
நிலவெடிப்பில்
உயிர்புகுந்த காதலில்
உயிரிழந்து விட்டாய்
தம்பி
ஓராண்டாகிறது உனைக் கொன்று
தவிக்கின்ற மனமெங்கும் 
தனலெழுதி நிற்கின்றாய்
தாங்கவெண்ணா மரணத்தைக்
கைவாங்கி வீழ்ந்திட்டாய்
தமிழராய் இரு என்று சொன்னாரெல்லாம்
வாய்பொத்தி ஓட்டளித்தார்
தடவுகின்றோம் உன் உடலின்
காயங்களை
கற்பனைக் காதலின்
கதைநாயகனைக் கொண்டாடும் மக்கள்
உண்மைக் காதலன்
உனைக் கொன்று போட்டனர்
காதல் என்பதோர் நனவிடைத்தோய்தலில்
உன் பெயரையே உச்சரிப்பர் அனைவரும்
பற்றவைத்த பெருநெருப்பு அழிப்பது வேண்டுமானால்
நம் வீடுகளை
வாழ்வுகளை அல்ல
வாழ்வாய் நீ நல்ல காதல்
நாட்டில் உள்ளவரை
 
நன்றி: தோழர். யாழன் ஆதி

Share this Story:

Follow Webdunia tamil