Publish Date: Sat, 14 Nov 2015 (21:23 IST)
Updated Date: Sat, 14 Nov 2015 (21:32 IST)
உதிரும் சிறகுகள்
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து -
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளரம் வழியே
- கவிக்கோ அப்துல் ரகுமான்