ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
செந்தேனினும்
நல்மணம் வீசும்
மலரின் மொட்டே! - என்
மனம் நிறைந்தவளே
சரியோ யான் அழைத்தல்
மனம் நிறைந்தவளே நீயெமக்கு
உன் உறவினன் நானல்ல - வேறு
உரிமையினனுமல்ல
அன்பு என்னில் உந்தித்தள்ள
உன்னில் பிரியம் வைத்தேன்
வளர்த்த அன்பினால் - இன்பம்
வளர்த்தேன் என்னுள்
வளர்ந்த அன்பினால் - துன்பம்
வருந்திட துடித்தேன்
ஆழ நேசித்தலும்
அன்பினில் நிறைத்தலும் - பின்
வலித்தாக்கியான்
வெந்து நோதலும்
பாழான என் வாழ்வினில்
பழக்கமாகிப் போனதே