Publish Date: Mon, 15 Mar 2021 (10:08 IST)
Updated Date: Mon, 15 Mar 2021 (10:11 IST)
தமிழகத்தின் 10 வது சட்டமன்றத் தேர்தல் கடந்த 1991 ஆம் ஆண்டு நடைபெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட இந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது..
மே 21 1991 இல் தமிழகத்தில் நாடாளமன்ற/சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் ஶ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இண்ட சம்பவத்தால் அதிமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடையே பெரும் அனுதாப அலையின் ஆதரவு கிட்டியது. இதனால் மாபெரும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.
திமுக இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.