Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து - திரையரங்க உரிமையாளர்கள்

Advertiesment
cinema poster

Sinoj

, வியாழன், 7 மார்ச் 2024 (20:45 IST)
நாளை புதுச்சேரியில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்து,  அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட  6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இன்று குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில்,சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து 
 
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து, இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டத்தை அறிவிக்கப்படுள்ளது.
 
இதனால், நாளை புதுச்சேரியில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாசிவராத்திரியில் துதிக்க சக்திமிகு சிவ மந்திரங்கள்!