அமெரிக்காவில் இந்திய மாணவி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அபர்னா ஜினாகா (24). இவர் சியாட்டிலில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிக் கொண்டு அங்குள்ள கல்வி நிறுவனத்தில் எம்.எஸ். படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் இருந்த அபர்னா ஜினாகா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும், கொலைச் சம்பவம் பற்றி அபர்ணாவின் பெற்றோருக்கு 3 நாட்களுக்குப் பிறகேத் தெரிய வந்துள்ளது.
கொலையாளி யார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அர்பனா ஜினாகாவின் தந்தையார் பி.சி. ஜினாகா ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 5 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.