தேவையான பொருட்கள்
இறால் - 1 கப்
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை அல்லது கேசரி பவுடர் - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சோள மாவு - அரை தேக்கரண்டி
அரிசி மாவு - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - சிறிது
எண்ணெய் - 2 கப்
தூள் உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள் அல்லது கேசரி பவுடர், இஞ்சி, பூண்டு விழுது, சோள மாவு, அரிசி மாவு, எலுமிச்சை சாறு, தூள் உப்பு ஆகியவற்றை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
இதில் உரித்த இறாலைப் போட்டு கிளறி 1 மணி நேரம் ஊற விடவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய இறாலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துப் பரிமாறவும்.
இறாலேப் பிடிக்காதவர்கள் கூட இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.