Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்பூசணியில் இதை கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (10:56 IST)
வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குவதில் தர்பூசணி பழம் இன்றியமையாதது. தர்பூசணி சாறுடன் சில பொருட்களை கலந்து அருந்தினால் கூடுதலாக சில பலன்களை அளிக்கிறது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.


  • தர்பூசணியில் அதிக அளவு விட்டமின் சி, நார்ச்சத்து, நீர்ச்சத்து ஆகியவை உள்ளது. இதனால் வெயில் காலங்களில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தர்பூசணி பழச்சாறுடன் இளநீர் கலந்து அருந்தினால் வெயிலால் ஏற்படும் சூடு தணியும். இரவில் உடல் சூடு காரணமாக ஏற்படும் சிறுநீர் எரிச்சல் போன்றவை வராது
  • தர்பூசணி பழத்துண்டுகளை பதநீரில் போட்டு சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். மேலும் வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சினைகளும் சரியாகும்
  • தர்பூசணி விதைகளை அரைத்து வெந்நீரில் போட்டு குடித்து வர சிறுநீர் கற்கள் கரையும். இதன்மூலம் சிறுநீரக பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
  • தர்பூசணி பழச்சாறுடன் சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டு வர நீர்த்தாரை எரிச்சல் சரியாகும்.
  • தொண்டை எரிச்சல், புண் மற்றும் தொண்டை வலி மறைய தர்பூசணி சாறுடன் பால் கலந்து சாப்பிடலாம்.
  • தர்பூசணி சாறுடன் நுங்கு கலந்து சாப்பிட்டு வர வெயில் கால வெக்கை, உடல்சூடு குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments