தர்பூசணியில் இதை கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (10:56 IST)
வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குவதில் தர்பூசணி பழம் இன்றியமையாதது. தர்பூசணி சாறுடன் சில பொருட்களை கலந்து அருந்தினால் கூடுதலாக சில பலன்களை அளிக்கிறது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.


  • தர்பூசணியில் அதிக அளவு விட்டமின் சி, நார்ச்சத்து, நீர்ச்சத்து ஆகியவை உள்ளது. இதனால் வெயில் காலங்களில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தர்பூசணி பழச்சாறுடன் இளநீர் கலந்து அருந்தினால் வெயிலால் ஏற்படும் சூடு தணியும். இரவில் உடல் சூடு காரணமாக ஏற்படும் சிறுநீர் எரிச்சல் போன்றவை வராது
  • தர்பூசணி பழத்துண்டுகளை பதநீரில் போட்டு சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். மேலும் வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சினைகளும் சரியாகும்
  • தர்பூசணி விதைகளை அரைத்து வெந்நீரில் போட்டு குடித்து வர சிறுநீர் கற்கள் கரையும். இதன்மூலம் சிறுநீரக பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
  • தர்பூசணி பழச்சாறுடன் சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டு வர நீர்த்தாரை எரிச்சல் சரியாகும்.
  • தொண்டை எரிச்சல், புண் மற்றும் தொண்டை வலி மறைய தர்பூசணி சாறுடன் பால் கலந்து சாப்பிடலாம்.
  • தர்பூசணி சாறுடன் நுங்கு கலந்து சாப்பிட்டு வர வெயில் கால வெக்கை, உடல்சூடு குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments