Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆயில் புல்லிங் செய்வதால் என்ன நன்மைகள்...?

ஆயில் புல்லிங் செய்வதால் என்ன நன்மைகள்...?
, செவ்வாய், 12 ஜூலை 2022 (17:38 IST)
நிறைய மருத்துவ நன்மைகளை பெற்றுள்ளது ஆயில் புல்லிங். தினமும் ஆயில் புல்லிங் செய்தால் மூட்டு வலி பிரச்சனை மற்றும் மூட்டுவீக்கத்திற்கு விடுதலை கிடைக்கும்.


தைராய்டு பிரச்சனை உள்ளர்களுக்கு கூட ஆயில் புல்லிங் சிறந்த நிவாரணி. ஆயில் புல்லிங் செய்வது மூலம் தைரொய்ட் சுரபிகள் சீராக சுரக்கப்படுகிறது.

மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆயில் புல்லிங் செய்து வருவதன் மூலம் மூட்டு வலி, மூட்டு வீக்கம் இவைகள் குறைக்கப்படுகிறது. தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால் மூட்டு வலி வராமலும் தடுக்கலாம்.

தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் செய்வதால், உடம்பில் உள்ள நச்சு தன்மை நீங்கி இயற்கையான மற்றும் அழகான முகப்பொழிவை பெறலாம்.

ஆயில் புல்லிங் செய்தல் சுறுசுறுப்பாக, உற்சாகமாக இருக்க உதவுகிறது. இரவில் நல்ல உறக்கத்திற்கு கூட உதவுகிறது. நல்லெண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்வதனால், உடம்பு குளிர்ச்சி பெற்று கண்களில் உள்ள நரம்புகள் சீராகிறது.

ஆயில் புல்லிங் செய்வதால் நம் உடலில் உள்ள நச்சுத் தன்மையானது வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம் நம் சருமம் பொலிவாக காட்சியளிக்கும். மாதவிடாய் சீராக இருக்க சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சீராக வராது. ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் நம் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் சமநிலை படுத்த பட்டு மாதவிடாய் சுழற்சியானது சரியான முறையில் வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர உதவ அழகு குறிப்புக்கள் !!