Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்ன...?

வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்ன...?
பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளை விட நிலக்கடலையில் அளவுக்கு அதிகமான சத்துக்கள் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சக்தியும் இந்த வேர்கடலைக்கு உண்டு.

பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை சீராக செயல்படும். கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது.எலும்பு சம்மந்தமான  பிரச்சனைகள் ஏற்படாது.
 
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவு உண்டு வந்தால் பித்தப்பையில் கல் இருந்தால் அவை கரையும். இதயத்தை பாதுகாக்கும். உடல் வலிமை பெறும்  .உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
உடலிக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும். இதயம் சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இளமையை தக்கவைக்க உதவும். ஆண்மை  சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும். 
 
மூளை சிறப்பாக செயல்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராகும். மன அழுத்தம் சரியாகும். கொழுப்பை குறைக்கும்.
 
நிலக்கடலையை ஊறவைத்து பால் எடுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதை போல் சாப்பிட்டு வந்தால் ஆண்மை வீரியம் அதிகரிக்கும். 
 
கருப்பை பிரச்சனைகள் ஏற்படாது. உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும். உடலை வலுபடுத்தும். இதயத்தை வலுபடுத்தும். உடலுக்கு நோய் எதுவும் வராமல் தடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்மை கோளாறுகளை முற்றிலும் நீக்கும் நத்தை சூரி மூலிகை !!