Publish Date: Fri, 01 Apr 2016 (08:16 IST)
Updated Date: Fri, 01 Apr 2016 (08:18 IST)
சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்.
மலிவான விலையிலும், இணையில்லாத சுவையிலும் அமைந்திருக்கும் இந்த தர்ப்பூசணியை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம்.
வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்த தர்ப்பூசணியை மிக எளிதாக நமக்குக் கிடைக்கிறது.
உடலில் வரும் வேர்க்குரு மீதும் தர்ப்பூசணி நீரை தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.