Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்று பிரச்சினைகளுக்கு விரைவில் நிவாரணம் தரும் வசம்பு !!

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (14:27 IST)
வசம்பு சுட்ட சாம்பலுடன் தேன் கூட்டிக் குழைத்து உள்ளுக்குக் கொடுத்து விட்டு, வசம்புச் சுட்டக் கரியை நீர் விட்டு உரசி எடுத்து வயிற்றில் கனமாகப் பூசி விட்டால் வயிற்று வலி குணமாகும்.


வசம்பைச் சுட்டுக் கரியாக்கி, தூள் செய்து சிட்டிகையளவு எடுத்து, முசுக்கைச்சாறு நான்கு துளி விட்டுக் கலக்கிக் காலை, பகல், மாலை ஆக மூன்று வேளை தொடர்ந்து கொடுத்து வந்தால் கக்குவான் குணமாகும்.

வசம்பைத் தூள் செய்து, அத்துடன் வெங்காயத் தோலையும் சேர்த்து நெருப்பில் போட்டு, சாம்பிராணி போல புகை போட்டால் கொசு எல்லாம் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

வசம்பை சாம்பலாக்கிய பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து குழந்தையின் வயிற்றில் தடவி வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும்.

வசம்பையும் தேனையும் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை சரியாகி விடும்.

குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், நல்ல கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற பலன்களை அள்ளி வழங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேங்காய் எண்ணெயும் அரிசியும்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த புதிய வழி

நமது உணவின் இரகசியம்: புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் முக்கியத்துவம்

உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை: பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்? அசத்தல் தகவல்கள்..!

மண்டையோடு மற்றும் உச்சந்தலை மறுசீரமைப்புடன் அரிதான தோல் புற்றுக் கட்டிக்கு வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை

அடுத்த கட்டுரையில்
Show comments