Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்றாட உணவில் நல்லெண்ணெய் சேர்ப்பதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!

Sesame oil
, சனி, 9 ஏப்ரல் 2022 (14:12 IST)
நல்லெண்ணெய்யில் மக்னீசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக நீரிரிவு நோயாளிகள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் நல்லெண்ணெய்யை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.


தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெய்யை 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் வைத்து நன்றாக அலசி வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் கிருமிகள் மற்றும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

எள் எண்ணெய்யில் பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளது. அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் பாதிக்கப் பட்ட புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

நல்லெண்ணெய்யில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளதால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தின் முக்கிய பொருளான கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் வயிற்றில் நல்லெண்ணெய் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பளபளப்பான முடியை பெற ஹேர் மாஸ்க் செய்வது எப்படி...?