Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்றாட உணவில் புதினாவை பயன்படுத்தி உடலுக்கு தேவையான சத்துக்களை பெற...!!

அன்றாட உணவில் புதினாவை பயன்படுத்தி உடலுக்கு தேவையான சத்துக்களை பெற...!!
புதினாவில் ஏ,பி,சி வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்பு, நார், புரதம் என்று பல்வேறு சத்துகளும் நிரம்பி உள்ளன.

பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. 
 
புதினாவின் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து  வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும். மேலும் காய்ச்சல், நீர்க்கடுப்பு, செரிமானம் ஆவதில் பிரச்சனை போன்றவை இருந்தால் புதினா சாறுடன்  எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இந்த பாதிப்புகள் நீங்கி விடும்.
 
புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மென்தால்’ என்ற  எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினாவில் இருந்து காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
 
புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு தீயில், நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல் இருக்கும் பாகங்களில் ஒத்தடம்  கொடுத்தால் வலி குறையும். மூட்டுவலிக்கு இந்த முறை சிறந்த பயனளிக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமுடி பிரச்சனைகளுக்கு பயன்தரும் வெள்ளரிக்காய் சாறு...!!