Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் இருமலை கட்டுக்குள் வைக்க உதவும் திப்பிலி !!

Webdunia
இளைப்பு நோய் கட்டுக்குள் கொண்டுவர திப்பிலிப் பொடி கடுக்காய் பொடியை சம அளவு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை குடித்து வந்தால் இளைப்பு நோய் குறையும்.

வீட்டில் சுக்கு, மிளகு இருப்பது போல திப்பிலியும் இருந்தால் நுரையீரல் பாதுகாப்பாக இருக்கும்.
 
திப்பிலி பொடியை கால் ஸ்பூன் எடுத்து கம்மாறு வெற்றிலை வைத்து தேன் கலந்து சாப்பிட காய்ச்சல் கோழை இருமல் விலகும் ஐந்து முதல் பத்து நாட்கள் இதை செய்ய வேண்டும்.
 
சிலருக்கு தீராத விக்கல் இருக்கும் அவர்கள் திப்பிலி 10 கிராம் சீரகம் 10 கிராம் லேசாக வறுத்து கஷாயம் செய்து தேன் கலந்து குடித்து வர நீண்ட நேர விக்கல் உடனே நிற்கும்.
 
சிலருக்கு உடலில் தேமல் இருக்கும் அது மறைய திப்பிலியை தூள் செய்து அத்துடன் வில்வ இலை பொடி அரை ஸ்பூன் கலந்து தேனுடன் காலை மாலை சாப்பிட்டு வர தேமல் மறைந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிடவும்.  
 
திப்பிலி 100 கிராம் கரிசலாங்கண்ணி இலை 1 பிடி எடுத்து இடித்து 500 மில்லி நீரில் போட்டு காய்ச்சி சுண்டிய பின் அடியில் நீக்கும் திப்பிலி கரிசாலை  வறுத்து பொடி செய்து அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை மாலை அரை டீஸ்பூன் எடுத்து சாப்பிட்டால் இருமல் உடனே குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

டிஷ்வாஷர்: இந்திய சமையல் பாத்திரங்களுக்கு ஏற்ற நவீன தீர்வு!

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்: லான்செட் ஆய்வறிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments