Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்களும் நன்மைகளும்....!

பிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்களும் நன்மைகளும்....!
முடி உதிர்தல் என்பது இந்த தலைமுறையினர் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று. பொதுவாகவே பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ரம்பை இலை பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.
இதை வெறும் வாசனைக்காக மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். இது அதையும் தாண்டி முடியின் ஆரோக்கியம், அழகுக்குறிப்புக்கும் பயன்படுகிறது. இதில்  இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியவை நம்மை இளமையாக வைக்கவும் உதவுகிறது.
 
பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். அதிலும் பிரியாணி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
 
பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராதரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.  எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.
 
தொடர்ந்து இந்த பிரியாணி இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும், பிரியாணி இலையை நன்கு வேகவைத்து அதன் தண்ணீர் நன்கு ஆறியதும் தலையை கழுவினால் முடி உதிர்வது நிற்கும். 
 
பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை சருமனத்தில் எரிச்சல் உள்ளவர்கள் கழுவினால் எரிச்சல் போகும். இதேபோல் பிரியாணி இலைக்கு விசத்தை முறிக்கும் தன்மையும் இருப்பதால் இது பாம்புகடிக்கும் மருந்தாகும்.
 
பிரியாணி இலையில் இருக்கும் ஆண்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்தில் இருந்தும் நம்மைக் காக்கும். இதேபோல் தலையில் பொடுகு, அரிப்பு தொல்லை  இருந்தால் பிரியாணி இலையை கொதிக்கவைத்த தண்ணீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் தேய்த்து வந்தால் இப்பிரச்னை தீரும்.
 
சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அதனைக் தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொய்யா இலையில் டீ போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...!!