Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள் !!

நெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள் !!
நெல்லிக்காயை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் அந்தத் தண்ணீர் எப்படி இருந்தாலும் இனிப்பாக இருக்கும். இது தலைச் சுற்றலையும் வாந்தியையும் நீக்கும்.

நெல்லிக்காயை தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வதை தடுக்கும். இளநரையை மாற்றும் முடி நன்கு வளரும்.
 
நெல்லி வற்றலும் பச்சைப் பயறும் தலா 20 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி காலை - மாலை இருவேளை சாப்பிட்டுவர தலைச் சுற்றல் கிறு கிறுப்பு இரத்தக் கொதிப்பு குணாமாகும்.
 
தினம் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். இளமையாக இருக்கவும் செய்யும் தொற்று நோய் வரவாது சிறு நீரகம் - இதயப்  பலப்படும்.
 
நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் தொர்று நோய் - தோல் நோய் குணமாகும். உடலில் உள்ள கொழுப்பு பொருளை கரைத்து ரத்தம் சீராகப்பாய்ந்து இதயத்துக்கு பலத்தைக் கொடுத்து மாரடைப்பு நொயை குணமாக்குகிறது.
 
இரத்த சோகையைக் குணப்படுத்தும் அருங்கணியான நெல்லிக்காய், எலும்பு முறிவைச் சீராக்கி, குடல் ரணத்தையும் குணப்படுத்தும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலையில் பொடுகு ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!