Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருங்கை இலையில் தேநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்...!!

Webdunia
முருங்கைக்கீரையில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருக்கிறது. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
முருங்கைக்கீரை தேநீர் தயாரிக்க: 
 
ஒரு தேக்கரண்டி முருங்கைக்கீரை பொடி, ஒரு தேக்கரண்டி கிரீன் டீ பொடி, 4 புதினா இலைகள், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1  தேக்கரண்டி வெல்லம், தேவையான அளவு சுடான நீர் ஆகியவை சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்கவும்.  நன்கு  கொதித்த பின் அதனை குடித்து வரலாம்.  
 
பயன்கள்: 
 
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகள் உறுதியாக இருக்கும். ஆர்த்திரிடிஸ் மற்றும் மூட்டு வலி இருப்பவர்கள் தினமும்  முருங்கைக்கீரை தேநீரை குடித்து வரலாம்.
 
ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வை மேம்படும். தினமும் முருங்கைக்கீரை தேநீர் குடித்து வந்தால் கண்  பார்வை அதிகரிக்கும்.  
கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மலச்சிக்கல் வாயுத்தொல்லை, அல்சர், செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. 
 
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்சனைகளை சரிசெய்து மனநிலையையும் சீராக வைக்க உதவுகிறது.
 
குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி குடிக்கலாம். கர்ப்பிணிகள் இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற உடல் உபாதைகளுக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி குடித்து வரலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள்: தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

உடல் சூட்டைக் குறைக்கும் எளிய வழிகள்..!

சீரக நீரா? தனியா நீரா? உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தைப் பேணவும் எது சிறந்தது?

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

அடுத்த கட்டுரையில்
Show comments