Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த பாலக்கீரை..!!

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த பாலக்கீரை..!!
பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருக்கின்றன. அதோடு பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து மற்றும் உப்பின் காரச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. 
பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகிறது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது.
 
நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த  கீரை உதவுகிறது.
 
பாலக் கீரை ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் இது அனிமியா நோய் வராமல் தடுக்க உதவுகிறது. பாகல் கீரையுடன்  வேப்பிலை ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.
webdunia
பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதிக அLaவில் உள்ளதால் கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.
 
பித்தம், நீர்த்தாரை, வெட்டை நோய்கள், மேகநோய் போன்ற தோல் நோய்களைக் குறைக்கும் வேலையை இந்த பசலைக்கீரை செய்கிறது.
 
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும்.
 
இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது. எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரும பராமரிப்பில் அற்புத பலன்தரும் ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள்!!